பாதுகாப்பு படைக்கு ரூ. 11,330 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

பாதுகாப்பு படையின் நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம்கிற்கு ரூ. 11,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

Update: 2018-05-16 11:28 GMT
புதுடெல்லி,

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு படையின்நெட்வொர்க் ஸ்பெக்ட்ரம்கிற்கு  ரூ. 11,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நொய்டா சிட்டி சென்டரிலிருந்து நொய்டா செக்டார் வரை மெட்ரோ ரயில் நெட்வொர்க் நீட்டிக்கப்பட உள்ளது.  டெல்லி மெட்ரோ ரயில் விரிவாக்கதிட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்