கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் பஞ்சாப் முதல்-மந்திரி குற்றச்சாட்டு
கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #AmarinderSingh
சண்டிகர்,
பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்-மந்திரியாக பா.ஜ.க வின் எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியதாவது:
கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார். ஆட்சி அமைப்பதில் ஆளுநரின் பங்கு உள்ளது. குஜராத்தில் மோடி அரசாங்கத்தின் கீழ் மந்திரியாகவும், ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக அவர் செயல்பட்டுள்ளார். அவரின் செயல்பாடுகள் வெளிப்படையாக தெரிகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.