கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் பஞ்சாப் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #AmarinderSingh

Update: 2018-05-17 10:20 GMT
சண்டிகர்,

பெரும்  சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்-மந்திரியாக  பா.ஜ.க வின் எடியூரப்பா  பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்  கூறியதாவது:

கர்நாடகா ஆளுநர் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார். ஆட்சி அமைப்பதில் ஆளுநரின் பங்கு உள்ளது.  குஜராத்தில் மோடி அரசாங்கத்தின் கீழ் மந்திரியாகவும், ஒரு ஆர்.எஸ்.எஸ்  உறுப்பினராக அவர் செயல்பட்டுள்ளார்.   அவரின் செயல்பாடுகள் வெளிப்படையாக தெரிகின்றது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்