‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கடும் கண்டனம்
‘குஜராத் மாடலில்’ நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு என முன்னாள் அகமதாபாத் ஐபிஎஸ் அதிகாரி கண்டனம் தெரிவித்து உள்ளார். #SterliteProtest
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் நாம் அனைவரும் விழித்துக்கொள்வதற்காக நிகழ்ந்ததாக இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய மக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது வேதாந்தாகுழுமத்தின் ஆப்ரேஷன். குஜராத் மாடல் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளுக்காக, அதிமுக தன்னுடைய மன்னிப்புகளை கேட்டுக்கொள்வது போல் தெரிகிறது என குறிப்பிட்டு உள்ளார்.