காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். #KupwaraAttack

Update: 2018-06-08 05:59 GMT

குபுவாரா,


  காஷ்மீரில் ரமலான் மாதத்தில் ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்று பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. பயங்கரவாதிகள் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களை பாதுகாக்கவும் பாதுகாப்பு படைக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பயங்கரவாதிகள் தரப்பில் கையெறி குண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு போன்ற தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது. இன்று குபுவாரா மாவட்டம் ஹாரில் பகுதியில் ராணுவ பாதுகாப்பு ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய ஸ்ரீநகர் சென்று உள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை பாதுகாப்பு படைகள் தேடிவருகிறது.

மேலும் செய்திகள்