இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கிரகம்..!

இந்திய விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். #PhysicalResearchLaboratory

Update: 2018-06-08 08:21 GMT
சென்னை,

பூமியில் இருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் புதிய கிரகம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

இந்திய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழு, துணை சனிகோள் அல்லது சூப்பர் நெப்டியூன் அளவு பெரிதான ஒரு கிரகத்தினை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியைப் போன்று ஆறு மடங்கு ஆரத்தில் பெரியதாகவும் 27 மடங்கு எடை கொண்டுள்ளாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கிரகம் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகம் தனது நட்சத்திரத்தை 19.5 நாளில் சுற்றி வருகிறது என்றும் இதன் வெளிப்புற வெப்பநிலை 600 டிகிரி செல்சியஸ் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளியைப் போன்று ஏழு மடங்கு குறைவாகவே இந்த புதிய கிரதத்துக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory (PRL) எனும் வானியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய கிரகத்துக்கு EPIC 211945201b or K2-236b என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கிரகம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அபு மலையில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோகிராப் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்