ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2018-07-12 13:41 GMT


அமராவதி,



ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழு அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என தெரியவந்துள்ளது. 5 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்