விநாயகர் சதுர்த்தியன்று சாமி கும்பிட சென்ற சிறுமி பலாத்காரம், போலீஸ் விசாரணை

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியன்று சாமி கும்பிட சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

Update: 2018-09-19 09:55 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கார் மாவட்டம் அகார் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் பந்தல் அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. அப்போது 13 வயது சிறுமி பிற சிறுவர்களுடன் பந்தலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது 24 வயது இளைஞன் தகானு சிறுமியிடம் ஆசைவார்த்தையாக பேசி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் போஸ்கோ சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்