குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன்

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2018-12-06 03:26 GMT
புதுடெல்லி,

குட்கா ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக விசாரணை துவங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ  நேற்று சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில்,  விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்