மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளது : ராகுல் காந்தி கருத்து

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

Update: 2018-12-11 23:43 GMT
புதுடெல்லி, 

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேச மாநிலங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ள மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவுகள் மோடி அரசின் கொள்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பண மதிப்பு இழப்பு, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்பட மத்திய அரசின் பல்வேறு முடிவுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு இந்த தேர்தல் முடிவுகள் தெளிவாக தெரிவித்துள்ளது. மாற்றத்துக்கான சரியான நேரம் இது. இந்த 3 மாநிலங்களிலும் அனைத்து வகையிலும் வளர்ச்சியை வழங்குவதாகவே எங்கள் நோக்கம் இருக்கும். தெலுங்கானாவில் இன்னும் சிறப்பாக பணியாற்றுவோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மேலும் செய்திகள்