காஷ்மீரில் குண்டு வெடித்ததில் சிறுவன் பலி

காஷ்மீரில் குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியானான்.

Update: 2018-12-30 21:30 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற இடத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரிப் அகமது (வயது 10). இவன் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, தரையில் வெடிக்காமல் கிடந்த குண்டு ஒன்றை ஏதோ பொருள் என்று நினைத்து கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குண்டு வெடித்ததில் ஆரிப் அகமது படுகாயம் அடைந்தான்.

இதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தான்.

மேலும் செய்திகள்