ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் -கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா

காங்.-மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க முயற்சிக்க மாட்டோம், கவலை வேண்டாம் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.

Update: 2019-01-19 06:17 GMT
பெங்களூர்

கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது:-

எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.  எந்த நிலையிலும் நாங்கள்  காங்.-மஜத கூட்டணி  ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலை கொள்ள தேவையில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்