6-ம் வகுப்பு பழங்குடியின மாணவி கர்ப்பம் பலாத்கார குற்றச்சாட்டில் உடன் படித்த மாணவன் கைது

ஒடிசாவில் 6-ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் உடன் படித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Update: 2019-02-08 12:33 GMT
மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் அரசு நடத்திவரும் உண்டு, உறைவிடப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு மருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக உடன்படித்த மாணவன் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்.  மருத்துவமனையில் நடைபெற்ற  பரிசோதனையில் சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமி கொடுத்த வாக்குமூலத்தில் தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். மாணவனை போலீசார் கைது செய்து  சிறார்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவன் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டான். 

இதனையடுத்து   சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.  இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்