காஷ்மீரில் பள்ளியில் வெடி விபத்து; 16 மாணவர்கள் காயம்

காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த வெடி விபத்தில், 16 மாணவர்கள் காயமடைந்தனர்.

Update: 2019-02-13 19:12 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நர்பால் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று குளிர்கால பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென பள்ளியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்