பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது

பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-02-16 03:01 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை (டெல்லி–வாரணாசி) நேற்று டெல்லியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரெயில் தொடக்க ஓட்டத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை புரிந்தது. இந்த ரயில், வர்த்தக ரீதியிலான பயணத்தை நாளை துவங்குகிறது. 

வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்த போது  பழுதானது.  தனது முதல் பயணத்திலேயே ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து,  அதில், பயணித்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பிற ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

 ரயிலின் ஏசி  கட்டுப்பாட்டு இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளது எனவும் ரயிலில் உள்ள பொறியாளர்கள் தெரிவித்தனர்.  ரயில் தற்போது 10 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்