இளைஞர் காங்கிரசார் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கைது

இளைஞர் காங்கிரசார் கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-19 21:00 GMT
காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேரியா என்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரிபேஷ், சரத்லால் ஆகியோர் 17-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகி பீதாம்பரன் இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்