அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-03-28 06:09 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளை தவிர 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நடத்த இயலாது எனவும் அவர் விளக்கம் அளித்தார். 

இதனிடையே, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 18 தொகுதிகளோடு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி முன்பு ஆஜராகி இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார். 

இந்த வழக்கில் "அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது" என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும். அவசர கதியில் நடத்த முடியாது என  திமுக தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில்  தேர்தல் ஆணையம் தகவல்  தெரிவித்து உள்ளது. இதனை ஏற்ற  சுப்ரீம் கோர்ட் ஏப்.18ல் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்