காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. தீவிரவாதிகளுடன் நடந்த இந்த சண்டையில் 4 வீரர்கள் காயமடைந்தனர். என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் ஒரு தீவிரவாதி சுட்சு கிராமத்தில் கொல்லப்பட்டார்.