61 வயது நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

61 வயது நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-04-13 05:41 GMT
கேரள மாநிலத்தில் 61 வயதான தொலைக்காட்சி நடிகை ஒருவர், தன்னை 37 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து அந்த வீடியோவை  சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழாவை சேர்ந்த 60 வயதான தொலைக்காட்சி நடிகை பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் காயங்குளம் போலீசில் அளித்துள்ள புகாரில், 37 வயதான ஜியா என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.  நாளடைவில் எங்கள் இருவருக்குள்ளும் பழக்கம் அதிகமானது. அவர் எனக்கு ஸ்மார்ட்போன்  ஒன்று வாங்கிக்கொடுத்தார்.

பின்னர், கொச்சியில் உள்ள ஓட்டல் மற்றும் எனது வீட்டில் வைத்து என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவுசெய்துகொண்டார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அதனை எனது கணவருக்கும் அனுப்பிவிட்டதால் எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எனவே ஜியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். விசாரணையில், ஜியா துபாய்க்கு தப்பி சென்று விட்டது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்