திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் : அறிக்கையை கோரியது மத்திய அரசு
திரிணாமுல் காங்கிரசுக்கு வங்காளதேச நடிகர் பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது.
வங்காளதேச நடிகர் பெர்டோஸ் அகமது மற்றும் இந்திய நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்தது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது. விசா நடைமுறைகளை பெர்டோஸ் அகமது மீறியுள்ளாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு (பாரின் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் - எப்ஆர்ஆர்ஓ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா -வங்காளதேசம் எல்லையில் ஹெம்தாபாத், காரான்திகாய் பகுதியில் பெர்டோஸ் அகமது பிரசாரம் மேற்கொண்டார் என தெரிய வந்துள்ளது.