உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலியாயின.

Update: 2019-04-20 19:59 GMT
ஹரித்துவார்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் ஜமல்பூர் காலன் பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நந்தாதேவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது 2 ஆண் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது யானைகள் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 யானைகளும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்