ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் உள்ள எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. மோர்டார்கள் மூலமாகவும் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.