ஆந்திராவில் ஆம்னி பேருந்து, வேன் மோதல்; 15 பேர் பலி
ஆந்திராவில் ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
கர்னூல்,
ஆந்திராவின் கர்னூல் நகரில் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்றும் வேனும் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் திரண்டு உள்ளனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.