காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-06-11 15:52 GMT

காஷ்மீரில் சோபியன் மாவட்டத்தில் அவ்னீரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை  பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் தங்கள் துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையின்போது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து நிறைய ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய கூடுதல் தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்