தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்
தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது.
புதுடெல்லி,
போதிய மழை பெய்யாத காரணத்தால், தமிழகம் முழுவதும் பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு இந்த நோட்டீசை அளித்துள்ளார்.