வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்

வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தில் 3 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2019-07-17 18:45 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் 24 விசாரணை கைதிகளை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் செய்திகள்