வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது

அசாமில் வெள்ளத்திற்கு மத்தியில் படகில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிருஷ்ணா என பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2019-07-18 12:14 GMT
அசாமில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திங்கள் கிழமை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் போது 24 வயது கர்ப்பிணி ருமி பதாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சுகாதாரத்துறை ஊழியர்கள் உதவியுடன் அவர் படகில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இந்து கடவுள் கிருஷ்ணா என பெயரிட்டுள்ளதாக ருமி கூறியுள்ளார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்