கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்வு

கனமழையால் அசாம், பீகாரில் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-07-26 02:40 GMT
பாட்னா,

பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ராணுவமும் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இரு மாநிலங்களில் சேர்த்து மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்