பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி

பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

Update: 2019-07-28 18:13 GMT
பாட்னா,

பீகார் மாநிலம் சாரன் மாவட்டம் டாய்லா கிராமத்தில் 10 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அப்பகுதிவாசிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதி 7 பேர், தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்கள் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்