கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் அமித்ஷா

கர்நாடகா மாநிலம் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-08-11 04:14 GMT
பெங்களூரு,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது.  இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். 

இந்த விழாவில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ராஜ்பவனில் தங்கிய அமித்ஷா வை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். 

சென்னையில் நடைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர்  உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று கர்நாடகா மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட உள்ளார். 

மேலும் செய்திகள்