பாகிஸ்தான் போர்நிறுத்த மீறல் : துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்

நவ்ஷெரா பகுதி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2019-08-17 10:45 GMT
ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா துறையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கி உள்ளது.  இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி  கொடுத்து வருகிறது என  என்று ஒரு இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில், ​​எல்.என்.கே. சந்தீப் தாபா (35)  என்பவர்  படுகாயமடைந்தார், இவர் டேராடூனைச் சேர்ந்தவர் ஆவார் என  ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்