காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-29 20:55 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரில், கடந்த மாதம் 5-ந் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 56-வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. இருப்பினும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் இயல்பாக நடமாட முடியவில்லை.

ஸ்ரீநகரில் ஷெஹார் இ காஷ்மீர் பகுதியில் பல இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

சாதாரண தொலைபேசி செயல்பட தொடங்கியது. இருந்தாலும், மொபைல் போன், இணையதள வசதிகள் இன்னும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்