ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.

Update: 2019-10-08 03:00 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.  பயங்கரவாதியை அடையாளம் காண்பது மற்றும் எந்த அமைப்பினை சேர்ந்த பயங்கரவாதி என உறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.  தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்