புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

Update: 2019-10-08 08:49 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் இன்று  நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியை  கொன்றதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் புறநகரில்  பயஙகரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த  பாதுகாப்பு  படையினர் அந்த பகுதியை சுற்றி  வளைத்தனர்.  அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை  நடந்து வருகிறது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு  துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.  

பயங்கரவாதி யார் எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்