காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி உள்ளது.