காஷ்மீரில் துப்பாக்கி சண்டை; பயங்கரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Update: 2019-11-10 20:45 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டம் லவ்டாரா கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை.

மேலும் செய்திகள்