பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு
பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.
கயா,
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பாஹுர் சவுரா பகுதியில் அனில்குமார் என்பவரின் கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மேலும் சில குண்டுகள் வெடிக்காமல் இருந்தன.
போலீசார் குண்டு வீசிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிகிறது.
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பாஹுர் சவுரா பகுதியில் அனில்குமார் என்பவரின் கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மேலும் சில குண்டுகள் வெடிக்காமல் இருந்தன.
போலீசார் குண்டு வீசிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிகிறது.