தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கப்படுமா? - மத்திய அரசு விளக்கம்

தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2019-11-27 19:12 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கே.வி.பி.ராமச்சந்திர ராவ் ஒரு கேள்வி எழுப்பினார். தென்னிந்தியாவில் 2-வது தலைநகரம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று அவர் கேட்டார்.

அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், “இல்லை. 2-வது தலைநகரம் அவசியம் என்று மத்திய அரசு கருதவில்லை” என்று கூறினார்.

மேலும் செய்திகள்