மராட்டியத்தில் மேயர் மீது நள்ளிரவில் துப்பாக்கி சூடு
மராட்டியத்தில் நாக்பூர் நகர மேயர் மீது நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
நாக்பூர்,
மராட்டியத்தில் நாக்பூர் நகர மேயராக இருப்பவர் சந்தீப் ஜோஷி. இவர் நேற்றிரவு தனது காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.
அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென ஜோஷியை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் 3 குண்டுகள் அவரது காரை துளைத்து கொண்டு சென்றுள்ளன.
எனினும், இந்த சம்பவத்தில் இருந்து ஜோஷி உயிர் தப்பிவிட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.