சண்டிகாரில் பயங்கரம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

சண்டிகாரில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-12-20 20:08 GMT
சண்டிகார்,

அரியானா மாநிலத்தை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 2 பேர் இரவு சண்டிகாரில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் திடீரென மாணவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் இருவரும் உயிரிழந்தனர். முன்விரோதம் காரணமாக இந்த பயங்கர சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா உதவியோடு மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்