குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம் - காங்- மூத்த தலைவர் ஆனந்த் சர்மா

குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங். காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என காங் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறினார்.

Update: 2020-01-11 14:45 GMT
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம்  2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங். காரியக் கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்  ஆனந்த் சர்மா, குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்