பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு

பெங்களூரில் போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

Update: 2020-01-13 02:58 GMT
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூர் எபி.டி.எம் ஏரி அருகே இன்று அதிகாலை தகராறில் ஈடுபட்ட ரவுடிகளை பிடிக்க பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் சென்று உள்ளனர். அங்கு ரவுடிகள் போலீசாரை  கத்தியால் தாக்கி உள்ளனர். போலீசார் தற்காப்புக்காக  2 ரவுடிகளை  முழங்காலுக்கு  கீழே சுட்டு உள்ளனர்.  காயம் அடைந்த 2 ரவுடிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்