ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு- உபி அரசு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்-வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-01-25 06:43 GMT
லக்னோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கம் வெல்லும் உத்தரப்பிரதேச மாநில வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்வோருக்கு தலா 2 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

இதேபோல், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்