டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு போலீசார் பிஹ்லட் புர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில், இருவர் சந்தேகத்திற்கிடமாக இருவர் அவ்வழியாக சென்றனர். இதைக் கவனித்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றனர். இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.