பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 8 ரூபாய் உயரும்?

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி 8 ரூபாய் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-03-23 19:48 GMT
புதுடெல்லி,

பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும், டீசல் மீதான உற்பத்தி வரி தலா 4 ரூபாயாகவும் தற்போது உள்ளது. இந்நிலையில், உற்பத்தி வரியின் உச்சவரம்பை தலா ரூ.18 ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், திருத்தம் கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி மசோதாவில் இந்த திருத்தத்தை கொண்டு வந்தார். விவாதமின்றி திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம், எதிர்காலத்தில் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை 8 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை 8 ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மத்திய அரசு விருப்பப்படும்போது, உற்பத்தி வரி உயர்வை அறிவிக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்