கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அளித்துள்ளார்.

Update: 2020-03-24 21:25 GMT
புவனேஸ்வரம்,

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’நவீன் பட்நாயக் தனது 3 மாத சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரோனாவை தடுக்க, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்‘ என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்