மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-31 04:25 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிற நபர்களுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இந்ந நிலையில், மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி புனே, புல்தானாவில் தலா இருவரும், மும்பையில் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்