நெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து

நெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-07 12:34 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2  வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர். 

பாய்லர் வெடித்த விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.

மேலும் செய்திகள்