மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரி பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-07-03 11:40 GMT
புதுடெல்லி,

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகள்