டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-31 11:51 GMT
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,598 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,963 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,195 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,930 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 10,705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்