சுய சார்புள்ள ஒருநாடாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை
74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-’’
- அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
- நம் நாடு சுதந்திரம் அடைய தங்களது உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி
- கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகளை காண முடியவில்லை.
- நாட்டின் பல்வேறு இடங்களும் மழை, நிலச்சரிவு ஆகிய காரனங்களால் போர்க்களமாக உள்ளது.
- கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி
- மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்
- நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது
- போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது
- பன்முகத்தன்மையே நமது பலம்
- இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
- பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.
- சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.
- இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது.
- இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்
- கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்
- சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது.
- ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்
- நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்